ஆப்நகரம்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்!

ரயில்களில் தீபாவளிக்கு ஊருக்குச் செல்பவர்கள், இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Samayam Tamil 5 Jul 2018, 6:17 am
சென்னை: ரயில்களில் தீபாவளிக்கு ஊருக்குச் செல்பவர்கள், இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Samayam Tamil Southern Railway


தென்னிந்தியாவில் தீபாவளி பண்டிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதனைக் கொண்டாட, லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வர். அதனால் பேருந்து, ரயில்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். ரயில்களைப் பொறுத்தவரை முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் 6ஆம் தேதி செவ்வாய் கிழமை கொண்டாடப்படுகிறது.

இதற்காக தீபாவளிக்கு முந்தைய வாரமான நவம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் இருந்தே சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டுச் செல்வர். எனவே நவம்பர் 3ஆம் தேதி சனிக்கிழமை பயணம் செய்வோர், ஜூலை 6ஆம் தேதியான இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதேசமயம் நவம்பர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்வோர், ஜூலை 7ஆம் தேதியான நாளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்துவிடும் என்பதால், பயணிகள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Diwali festival train tickets reservation starts today morning.

அடுத்த செய்தி