ஆப்நகரம்

எல்லோரும் தயாரா… நாளை முதல் தீபாவளி ரயில் புக்கிங் துவக்கம்..

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நாளை முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Samayam Tamil 4 Jul 2018, 10:36 pm
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக நாளை முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Samayam Tamil diwali special train


2018 ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 6ம் தேதி வரவுள்ளது.வழக்கமாக த தீபாவளி, பொங்கள் பண்டிகை என்றாலே எல்லா மக்களும் தங்களது சொந்த ஊர், சொந்த கிராமத்தில் கொண்டாடுவது வழக்கம். சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள முக்கால்வாசி மக்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான்.

இந்நிலையில்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது நாளை முதுல் ரயில் முன்பதிவு சேவை துவங்க உள்ளது. அதன்படி நாளை காலை எட்டு மணிக்கு முன்பதிவு ஆரம்பிக்கிறது. தீபாவளி செவ்வாயன்று வரவுள்ளதால், பெரும்பாலான மக்கள் அதற்கு முந்தைய வாரம் வெள்ளியன்று புறப்பட திட்டமிட்டுள்ளார்கள். எனவே, நாளை முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி