ஆப்நகரம்

விஜயகாந்துக்காக மண் சோறு சாப்பிட்ட தொண்டா்கள்

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல்நலம் பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டா்கா் வெள்ளிக்கிழமை மதுரை மாரியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

Samayam Tamil 14 Jul 2018, 8:04 am
தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் விரைவில் நல்ல உடல்நலம் பெற வேண்டும் என்று அக்கட்சியின் தொண்டா்கா் வெள்ளிக்கிழமை மதுரை மாரியம்மன் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
Samayam Tamil Vij


தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறவேண்டி சமீபத்தில் அமெரிக்கா சென்றுள்ளாா். விஜயகாந்த் அமெரிக்கா சென்றதைத் தொடா்ந்து அவரது தொண்டா்கள் தொடா் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அலங்காநல்லூா் முனியாண்டி கோவிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்தனா்.

தொடா்ந்து அவனியாபுரம் கோவிலில் ஆயிரம் தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். அதன் தொடா்ச்சியாக வெள்ளிக்கிழமை மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, மண்சோறு சாப்பிட்டு, தேங்காய் இடைத்து வழிபாடு நடத்தினா். பின்னா் கோவில் வளாகத்தில் தொண்டா்கள் சிலா் மண்சோறு சாப்பிட்டனா். கோவிலுக்கு வந்த பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி