ஆப்நகரம்

வெயிலில் வாடும் மக்களுக்கு தண்ணீர் வழங்குங்கள் : விஜயகாந்த்!

கோடையில் வாடும் மக்களுக்கு உதவ ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்க தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN & Agencies 12 Mar 2017, 1:30 am
சென்னை: கோடையில் வாடும் மக்களுக்கு உதவ ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைக்க தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil dmdk chief vijayakanth has asked his party men to set up thaneer panthal at various places in the state
வெயிலில் வாடும் மக்களுக்கு தண்ணீர் வழங்குங்கள் : விஜயகாந்த்!


இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’
கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. தமிழக மக்கள் இந்த கோடைகாலத்தை சமாளிக்க தே.மு.தி.க. சார்பில் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

ஆண்டு தோறும் நம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவ, தண்ணீர் பந்தல்கள் அமைத்து உதவுவது வழக்கம். அதேபோல தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்ப்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கி, தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என அந்த
அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

DMDK chief Vijayakanth has asked his party men to set up thaneer panthal at various places in the state.

அடுத்த செய்தி