ஆப்நகரம்

ஜூன் 3இல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தலைமை வகிக்கும் லேடி கேப்டன்!

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது

Samayam Tamil 25 May 2022, 2:16 pm
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்டச் செயலாளர்கள் ஆலோனை கூட்டம் கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 2022 ஜூன் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறவுள்ளது.
Samayam Tamil பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்


மாவட்டச் செயலாளர் அனைவரும் தவறாமல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இதனால், தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகளை அவரது மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், மைத்துனன் சுதீஷ், மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோரே கவனித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின்போது, தேமுதிகவுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றன. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை செயல் தலைவராக்க வேண்டும் என்ற குரல்களும், அவரது மகன் விஜய பிரபாகரனிடம் இளைஞரணியை ஒப்படைக்க வேண்டும் என்ற குரல்களும் ஒலித்தன. ஆனால், அதற்கு பிறகு அந்த குரல்கள் அடங்கிய நிலையில், எதிர்வரவுள்ள தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி