சென்னை: மக்களவை தேர்தலில் பா.ஜ.க., உடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக., துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் தேமுதிக., கட்சி நிகழ்ச்சி நடந்தது. அதில் அக்கட்சி துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றார். இதற்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சுதீஷ் கூறுகையில்,‘ நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுக்கிறேன். தொகுதியை விஜயகாந்த் முடிவு செய்வார்.
பா.ஜ.க, அதிமுக உட்பட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இரண்டு வாரத்தில் தலைவர் விஜயகாந்த் நாடு திரும்பவுள்ளார்.
அதன் பின் அவரிடம் எங்கள் அறிக்கையை சமர்பிப்போம். பிப்ரவரி இறுதிக்குள் கூட்டணி உறுதி செய்யப்படும்.’ என்றார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது.
பா.ஜ.க, அதிமுக உட்பட கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். இரண்டு வாரத்தில் தலைவர் விஜயகாந்த் நாடு திரும்பவுள்ளார்.