ஆப்நகரம்

நாட்டுக்கு நல்லது நடக்க 'கேப்டன்' சொல்லும் யோசனை!!

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 May 2020, 1:21 am
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பின் முக்கிய நடவடிக்கையாக மே 17 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dmdk


இந்த நிலையில் மே 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்தது.

அரசின் இந்த அறிவிப்புக்கு அதிமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மதுக்கடைகள் ஏன் திறக்கப்படுகின்றன..? - அமைச்சர் எக்ஸ்பிளைன்

அரசியல் கட்சிகளின் இந்த எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கான பல்வேறு காரணங்களை ஆளுங்கட்சி அமைச்சர்களை கூறி லருகின்றனர்.

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அரசின் இந்த முடிவு குறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனா காரணமாக சென்னையில் டாஸ்மாக்கடைகள் திறக்கப்படாது என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்.

மற்ற மாவட்டங்களில், மே7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டும் என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும். டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடினால் மக்களுக்கும்,நாட்டிற்கும் நன்மை பயக்கும்" என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி