ஆப்நகரம்

DMDK: இப்படியொரு சிறப்பான நாள்; மிஸ் பண்ணாம வந்திருங்க - அழைக்கும் விஜயகாந்த்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய நாளினை குறிப்பிட்டு அதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Feb 2020, 12:14 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவரை அனைவரும் ’கேப்டன்’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர். இவரது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து, தமிழக மக்கள் ஆதரவுடன் கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
Samayam Tamil Vijayakanth


2006 சட்டமன்ற தேர்தல், 2009 மக்களவை தேர்தல், 2011 சட்டமன்ற தேர்தல் என தொடர்ச்சியாக வீறு கொண்டு எழுந்தது தேமுதிக. இந்நிலையில் 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தொடங்கிய சரிவு இன்று வரை முடிவுக்கு வந்தபாடில்லை.

இதற்கிடையில் உடல்நலக்குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது உடல்நலம் தேறி வந்தாலும் தீவிர அரசியல் பணி ஆற்றாமல் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் தேமுதிக சார்பில் அறிக்கை ஒன்றை விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

காவிரி டெல்டா - பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதால் என்ன பயன்...?

அதில், வரும் 12ஆம் தேதி கழகத்தின் 20ஆம் ஆண்டு கொடி நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணியளவில் கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் கொடியேற்றுகிறார்.

அதுவும் 118 அடி உயர கம்பத்தில் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இந்த விழாவில் மாவட்ட, வட்ட மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடி நாள் விழா சிறப்பாக கொண்டாட வேண்டும். ”இயன்றதைச் செய்வோம்! இல்லாதவர்க்கே” என்ற நம் கழகத்தின் கொள்கைப்படி ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வோம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்த 4 பேரின் நிலை என்ன; தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கா? அமைச்சர் முக்கிய தகவல்!

இந்நிலையில் கொடி நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை தேமுதிக தொண்டர்கள் விறுவிறுப்பாக செய்யத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி