ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ரஜினிகாந்த் தனது பேச்சில் நேற்று மூன்று திட்டங்களை முன்வைத்தார். தான் முதல்வராக மாட்டேன் என்றும், கட்சியும் ஆட்சியும் வேறு வேறு நபர்களிடம் இருக்க வேண்டும் என்றும்பேசினார். அடுத்ததாக இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு, தேர்தலுக்குப் பின் கட்சிப் பதவிகளை கலைத்துவிடுவேன் என்றும் பேசினார்.
இந்தப் பேச்சு ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் பேச்சு குறித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுக்கு அவர் நேரடியாவே சொல்லியிருக்கலாம்: ரஜினி குறித்து திருமா 'நச்’!
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரஜினிகாந்த் நல்ல மனிதர். எங்கள் குடும்பத்திற்கு அவர் மேல் ஒரு மரியாதை உண்டு. ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும் நிச்சயம். ஒரு மாற்றம் தமிழக அரசியலில் நிகழப் போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட” என்று பேசியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தாலும் தொடர்ந்து கூட்டணித் தலைமை மீது தேமுதிக அதிருப்தியில் உள்ளது. கூட்டணியில் இருக்கும்போதே 2021ஆம் ஆண்டு தேமுதிக ஆட்சி அமைக்கும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் பேசிவருகின்றனர்.
ரஜினிகாந்த் தனது பேச்சில் நேற்று மூன்று திட்டங்களை முன்வைத்தார். தான் முதல்வராக மாட்டேன் என்றும், கட்சியும் ஆட்சியும் வேறு வேறு நபர்களிடம் இருக்க வேண்டும் என்றும்பேசினார். அடுத்ததாக இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு, தேர்தலுக்குப் பின் கட்சிப் பதவிகளை கலைத்துவிடுவேன் என்றும் பேசினார்.
இந்தப் பேச்சு ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் பேச்சு குறித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுக்கு அவர் நேரடியாவே சொல்லியிருக்கலாம்: ரஜினி குறித்து திருமா 'நச்’!
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரஜினிகாந்த் நல்ல மனிதர். எங்கள் குடும்பத்திற்கு அவர் மேல் ஒரு மரியாதை உண்டு. ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும் நிச்சயம். ஒரு மாற்றம் தமிழக அரசியலில் நிகழப் போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட” என்று பேசியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தாலும் தொடர்ந்து கூட்டணித் தலைமை மீது தேமுதிக அதிருப்தியில் உள்ளது. கூட்டணியில் இருக்கும்போதே 2021ஆம் ஆண்டு தேமுதிக ஆட்சி அமைக்கும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் பேசிவருகின்றனர்.