ஆப்நகரம்

இடைத்தேர்தல் முறையாக நடந்தால் தேமுதிக., தான் வெற்றிபெறும்

மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முறையாக நடைபெற்றால் அதில் தேமுதிக., தான் வெற்றி பெறும் என தே.மு.தி.க., மகளிரணி செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

TNN 7 Nov 2016, 6:20 am
சென்னை : மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முறையாக நடைபெற்றால் அதில் தேமுதிக., தான் வெற்றி பெறும் என தே.மு.தி.க., மகளிரணி செயலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dmdk will win in byelection premalatha
இடைத்தேர்தல் முறையாக நடந்தால் தேமுதிக., தான் வெற்றிபெறும்


சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், “ஓட்டுகளை பெற மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடுகின்றனர். அந்த வகையில் பார்த்தால் தற்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் தான் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஏற்கனவே தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாக தேர்தல் ரத்தானாது. அங்கு நடைபெறுவது மறுதேர்தல் தான்.

தேர்தல் ஆணையம் முறையாக இடை தேர்தலை நடத்தினால் அதில், தேமுதிக., தான வெற்றி பெறும். 17ம் தேதி வரை நான் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறேன். விஜயகாந்த் விரைவில் பிரச்சாரத்திற்கு வருவார்.

வைகோ தினந்தினம் ஒரு கருத்து கூறுவார். அதற்கெல்லாம் நாங்கள் பதில் கூற முடியாது” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி