ஆப்நகரம்

கருணாநிதி உடல்நலம் பெற, கட்சி தொண்டர் மொட்டை அடித்து வேண்டுதல்!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி அக்கட்சித் தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்திய நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 30 Jul 2018, 10:21 am
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி அக்கட்சித் தொண்டர் ஒருவர் மொட்டை அடித்து வேண்டுதல் நடத்திய நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil cats
கருணாநிதி உடல்நலம் பெற, கட்சி தொண்டர் மொட்டை அடித்து வேண்டுதல்!


காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து நேற்றிரவு ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியும், தொண்டர்கள் செல்ல மறுத்ததால் மருத்துவமனை வளாகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிவித்தத்தைத் தொடர்ந்து திமுக தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் இன்று காலை கீரனூரை சேர்ந்த திமுக தொண்டர் வீரமணி என்பவர் திடீரென காவேரி மருத்துவமனை வாயிலின் முன்புமொட்டையடித்து வேண்டுதல் நடத்தினார். இதை பார்த்த சகதொண்டர்கள் உணர்ச்சி பொங்க எழுந்து வா தலைவாஎன்றும் எங்கள் தலைவர் மீண்டு வருவார் என்றும் முழக்கமிட்டனர்.

இதுகுறித்து கீரனூரைச் சேர்ந்த வீரமணி கூறுகையில், திராவிட இயக்க கொள்கையின் அடிப்படையில் கடவுள் மறுப்பாளராக இருந்த போதும் தலைவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மொட்டை போட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் மூன்று நாட்களாக உணவு உண்ணாமல், கருணாநிதிக்காக உண்ணாநிலை இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி அக்கட்சித் தொண்டர் ஒருவர், மொட்டை அடித்து வேண்டுதல் நடத்திய சக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி