ஆப்நகரம்

வாட்ஸ் -அப்பால் திமுக பிரமுகருக்கு வந்தது வம்பு!!

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

Samayam Tamil 15 Mar 2020, 7:27 pm
சமூக ஊடகமாக வாட்ஸ் அப், தகவல் தொடர்பில் இன்று முக்கிய பங்கு வகிக்கிறது. அதேசமயம் இதில் உலாவரும் செய்திகள், தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களும் அவ்வபோது எழுந்து கொண்டுதான் உள்ளது.
Samayam Tamil வாட்ஸ் -அப்பால் திமுக பிரமுகருக்கு வந்தது வம்பு


இது ஒருபுறமிருக்க, தனிநபர்களை பற்றி மிகவும் எளிதாக அவதூறு பரப்பும் களமாகும் வாட்ஸ் அப் மாறியுள்ளது.

இப்படியொரு நிகழ்வுதான் கோவையில் நிகழ்ந்துள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். திமுக மாநகர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவர், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக கூறி, அதிமுகவைச் சேர்ந்த கவுதம் என்பவர், போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், கோவை ராமநாதபுரம் போலீசார் நேற்று நள்ளிரவு, முருகனை வீட்டில் இருந்து அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தகவலறிந்து திமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து முருகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், முருகனை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி