கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மேலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதில், பாஜக 353 இடங்களில் வெற்றி பெற்றது.
மக்களவை பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை அடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தையும், 23 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழகத்தில் நடந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி வாகை சூடியது. ஆளும் அதிமுக 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அவருடன், தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி, டிஆர் பாலு, ஆ ராசா மற்றும் முக்கிய நிர்வாகிகளான திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தொடர்ந்து பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் கடந்த 19ம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மேலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதில், பாஜக 353 இடங்களில் வெற்றி பெற்றது.
மக்களவை பெரும்பான்மைக்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை அடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 52 தொகுதிகளில் வெற்றி பெற்று 2ஆவது இடத்தையும், 23 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தமிழகத்தில் நடந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி வாகை சூடியது. ஆளும் அதிமுக 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
உழைப்பாளர் சிலையில் இருந்து பேரணியாக சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அவருடன், தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி, டிஆர் பாலு, ஆ ராசா மற்றும் முக்கிய நிர்வாகிகளான திருச்சி சிவா, தயாநிதி மாறன் ஆகியோர் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தொடர்ந்து பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.