ஆப்நகரம்

மேகதாட்டு அணை விவகாரம்; திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

சென்னை: திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தொடங்கியது.

Samayam Tamil 29 Nov 2018, 10:54 am
மேகதாட்டுவில் தடுப்பணை கட்டுவதற்கு மத்திய நீர்வள ஆணையம் கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil DMK


இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மேகதாட்டு விவகாரத்தில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது. அதில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேகதாட்டுவில் தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யவுள்ளது.

அடுத்த செய்தி