ஆப்நகரம்

தமிழக அமைச்சர்கள் அரபு நாட்டு அடிமைகளாக உள்ளனர்; துரைமுருகன் குற்றச்சாட்டு

ஆளுநா் பன்வாாிலால் புரோகித் நேற்று அரசு அதிகாாிகளுடன் திடீா் ஆய்வு மேற்கொண்டதையடுத்து, தமிழக அமைச்சா்கள் அரபு நாட்டு அடிமைகளாக உள்ளனா் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளா் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளாா்.

TOI Contributor 15 Nov 2017, 3:46 pm
ஆளுநா் பன்வாாிலால் புரோகித் நேற்று அரசு அதிகாாிகளுடன் திடீா் ஆய்வு மேற்கொண்டதையடுத்து, தமிழக அமைச்சா்கள் அரபு நாட்டு அடிமைகளாக உள்ளனா் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளா் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளாா்.
Samayam Tamil dmk durai murugan criticize the taminladu ministers
தமிழக அமைச்சர்கள் அரபு நாட்டு அடிமைகளாக உள்ளனர்; துரைமுருகன் குற்றச்சாட்டு


சமீப காலமாக ஆளுநர்கள் மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது அதிகரித்து வருகிறது. இதை பாஜக அரசு ஊக்குவிக்கிறது. செயல்படாத ஆட்சியை செயல்படுத்த வேண்டும் அல்லது தூக்கி எறிய வேண்டும். அதைவிடுத்து, ஆளுநரே நேரடியாக மாநில நிர்வாகத்தில் தலையிடுவது மாநில சுயாட்சிக்கும், உரிமைக்கும் பங்கம் விளைவிப்பதாகும்.

ஆளுநர் அவருக்குரிய வேலையை செய்யலாம். அல்லது அமைச்சர்களை அழைத்து பேசலாமே தவிர நேரடியாக தலையிடுவது முறையல்ல. இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது.
தமிழக அமைச்சர்களுக்கு மாநில சுயாட்சியும் தெரியாது, மாநில உரிமையும் தெரியாது.

இவர்கள் அரபுநாட்டு அடிமைகளாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மத்திய அரசு இவர்கள் வணங்குகிற தெய்வம். ஆளுனர்கள் உள்ளூர் தெய்வங்கள். தமிழக முதல்வர் நற்காலியில் ஆளுனரே அமர்ந்தாலும் கவலையில்லை என்ற என்னத்தில் தான் அமைச்சர்கள் உள்ளனர்.

அடுத்த செய்தி