ஆப்நகரம்

திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- நாமக்கல் அருகே அதிர்ச்சி!

திமுகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Aug 2019, 5:25 pm
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஆனந்த் என்பவர் நர்சிங் ஹோம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வந்தார்.
Samayam Tamil Suicide


அதேசமயம் திமுகவின் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராகவும் இருந்தார். இவரது மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஒரே நாளில் ஹீரோவான மாரிதாஸ் மீது திமுக புகார்!!

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் செங்கம் பள்ளி கிராமத்திற்கு ஆனந்த் சென்றுள்ளார். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை அடைந்தார். இதையடுத்து கீழிருந்து மேலாக கழுத்தை நோக்கி துப்பாக்கியை வைத்து அமர்ந்தபடி, சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மருத்துவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை நிலவரம் என்ன? உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்!

எனவே பணப் பிரச்சினை காரணமாக, இந்த தற்கொலை நிகழ்ந்திருக்காது என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில் துப்பாக்கியை கைப்பற்றி, ஆனந்தின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் நாமக்கல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் கணவரின் தற்கொலை செய்தி கேட்டு, மனைவி சம்பவ இடத்திற்கு விரைந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாங்காத கடனுக்கு வட்டி- விவசாயியிடம் மன்னிப்பு கோரிய வங்கி நிர்வாகம்!

அடுத்த செய்தி