ஆப்நகரம்

மக்கள் பிரச்னைகளை பார்க்காமல் பதவிக்கு சண்டையிடுகின்றனர் - முக.ஸ்டாலின்

திமுக உயர்நிலை செயற்குழு கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்தொடருக்கு பின் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

TNN 13 Feb 2017, 6:53 pm
திமுக உயர்நிலை செயற்குழு கூட்டம் இன்று நடைப்பெற்றது. கூட்டத்தொடருக்கு பின் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
Samayam Tamil dmk executive committee meeting
மக்கள் பிரச்னைகளை பார்க்காமல் பதவிக்கு சண்டையிடுகின்றனர் - முக.ஸ்டாலின்


மக்களின் பெரும்பாண்மைபடி யார் விரும்புகிறார்களோ அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள செயல் முதல்வரோ பிரச்னையை கவனிக்காமல் முதல்வராகும் முயற்சியில் பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசு நிலையாக இல்லாததால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் பஞ்சம் அதிகரித்துள்ளதாகவும், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

சுப்ரமணியம் சுவாமி சசிகலா முதல்வராக வேண்டும் என தெவிவிக்கின்றாரே என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், சுப்ரமணியம் சுவாமி கூறுவதை அவர் கட்சியே ஏற்பதில்லை நாம் ஏன் பேசவேண்டும் என தெரிவித்தார்.

கூவாத்தூரில் அதிம்க எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எங்களைப் பொறுத்த வரையில், திமுகவின் முதல் எதிரஅதிமுக தான்.

எங்கள் கூட்டத்தொடரில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்

அடுத்த செய்தி