ஆப்நகரம்

DMK: கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே, திமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் துவங்கியது.

Samayam Tamil 14 Aug 2018, 11:07 am
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு நடுவே, திமுக அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் துவங்கியது.
Samayam Tamil Capture1


திமுக தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மறைந்தார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு துவங்கிய இந்தக் கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்படுவதே கூட்டத்தின் நோக்கம். அடுத்த தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்வது குறித்த பொதுக்குழு என்று கூடும் என இதில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

இதில் திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். அதில் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டார். அதில்

* மகளிருக்கு உள்ளாட்சி அமைப்பில் 33% இட ஒதுக்கீடு அளித்தவர்.

* சுதந்திர தினத்தனத்தின் மாநில முதல்வர்கள்
தேசியக்கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர்.

* பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க நடவடிக்கை எடுத்தவர்.

* கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர முனைப்பு காட்டியவர்.

* பொதுவாழ்வில் ஈடுபடுவோர் பின்பற்றக்கூடிய பல்கலைக்கழகம்.

* கை ரிக்‌ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டம் தந்தவர்.

*ஈழத் தமிழர்களின் உரிமைக்காக 1956 முதலே குரல் கொடுத்தவர்

மவுன அஞ்சலி:

இதை தொடர்ந்து கருணாநிதிக்கு கட்சி உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த செய்தி