ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தலை தடுத்து நிறுத்துங்கள்... உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

உள்ளாட்சி தேர்தலைக் கண்டு பயப்படுகிறதா திமுக என்ற கேள்வியை வலுப்படுத்தும் விதமாகத்தான் இந்த மனு இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Samayam Tamil 29 Nov 2019, 1:52 am
உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil stalin


தமிழகத்தில், 8 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. அதே சமயம், உள்ளாட்சித் தேர்தல் சரியாக நடத்தப்பட்டால்தான் ஊரகப் பகுதி உள்ளிட்ட அனைத்து குடிமக்களுக்கும் அரசின் எல்லா அறிவிப்புகளும் சரியாகச் சென்றடையும் என்பதையும் 8 ஆண்டு காலமாக தமிழக அரசியல் சூழலில் அனைவரும் பேசிக்கொண்டே இருந்தனர்.



அதற்கு முன்பு வரை, 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய தேர்தல், பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதாக, திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான்,நடத்தப்படாமல் இருந்தது.

அதன்பிறகு 2017 ஆம் நடத்தப்படுவதாக இருந்த நேரத்தில், தேர்வு சமயம் என்பதால் நடத்தவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பின், கட்சி சார்பற்று அனைத்து தரப்பும் அரசு எந்திரத்தை குறை சொல்லி வந்த இந்த விவகாரத்தில், தேவையான திருப்பமாக அமைந்தது உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பு.



அதாவது, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்ற தீர்ப்புதான் அது.

இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் வெகுவேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் முதல் வாரத்திற்குள் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது’ என்று உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.



ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திமுக தொடர்ந்த மனுவின் மீது இன்னும் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பட்டியலை வெளியிடவும், தேர்தலை நடத்தவும் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருப்பது திமுகவின் மீதான கேள்விகளை மேலும் வலுப்படுத்துகிறது.

அடுத்த செய்தி