ஆப்நகரம்

மறைமுகத் தேர்தல் விவகாரம்- நீதிமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட திமுக!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக திமுக முறையீடு செய்துள்ளது.

Samayam Tamil 9 Jan 2020, 11:46 am
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதில் இழுபறி நீடித்து வந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
Samayam Tamil DMK Flag


சரியாக இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை, புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதில் பிரச்சினை, 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை பின்பற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தன.

ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு; இன்று முதல் மீண்டும் விநியோகம்!

இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தலை அறிவித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கிடையில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சென்னை புத்தக கண்காட்சி: ஒரே இடத்தில் ஒரு கோடி புத்தகங்கள்- மறக்காம போயிட்டு வந்துடுங்க!

இந்த சூழலில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி ஜனவரி 2ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து மறைமுகத் தேர்தல் கூட்ட நாள் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த சூழலில் மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.

கன்னியாகுமரிக்கு இன்று பொது விடுமுறை, வெளியானது அறிவிப்பு!

இதனை மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரிக்கப்படும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி