ஆப்நகரம்

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

திமுக-வின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 28 Aug 2018, 10:36 pm
திமுக-வின் முன்னாள் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மனைவி தயாளு அம்மாள் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil dhayalu-ammal-cover-pic
தயாளு அம்மாள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி


முன்னதாக, கோபாலபுரத்துக்கு சென்று கருணாநிதியின் படத்திற்கு விளக்கேற்றி வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றனர். அதை தொடர்ந்து கருணாநிதியின் மகன் தமிழரசு, உறவினர்கள் தயாநிதிமாறன், சண்முகநாதன் உள்ளிட்டோர் அவரை வாழ்த்தினர்.

அதை தொடர்ந்து ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது இருவருக்கும் விபூதி வைத்து ஆசி வழங்கினார் தயாளு அம்மாள். இதை அடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று இரவு 9.50 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனையில் தயாளு அம்மாள் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதே, தயாளு அம்மாள் உடல் நலிவுற்றிருந்தார்.

மேலும், காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஒரே ஒரு முறை மட்டுமே வந்து தயாளு அம்மாள் அவரை உடல் நலனை கேட்டறிந்தார்.

பிறகு கருணாநிதி காலமான நிலையில், அவரது உடல் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, குடும்பத்தினருடன் ஒரே ஒருமுறை தயாளு அம்மாள் அவருக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி