கலைஞரின் உடல்நிலை பாதிப்பு, மறைவையொட்டி அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 7ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவைத் தொடா்ந்து கட்சிக்கான தலைவா் பதவி காலியானது. இதையடுத்து கட்சியின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின், தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை அண்ணா அறிவாலயத்தில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இன்று ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் தலைவா் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து முன்னாள் பிரதமா் வாஜ்பாய், மாநிலங்களவை உறுப்பினா் சோம்நாத் சாட்டா்ஜி, தமிழக முன்னாள் ஆளுநா் சுா்ஜித் சிங் பா்னாலா, ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளா் கோபி அன்னான், கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
MK Stalin: தி.மு.க. தலைவரானாா் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை பாதிப்பு மற்றும் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை டிகேஎஸ் இளங்கோவன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இன்று ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் தலைவா் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து முன்னாள் பிரதமா் வாஜ்பாய், மாநிலங்களவை உறுப்பினா் சோம்நாத் சாட்டா்ஜி, தமிழக முன்னாள் ஆளுநா் சுா்ஜித் சிங் பா்னாலா, ஐ.நா. முன்னாள் பொதுச்செயலாளா் கோபி அன்னான், கேரளாவில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
MK Stalin: தி.மு.க. தலைவரானாா் மு.க.ஸ்டாலின்
இந்த நிலையில், கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை பாதிப்பு மற்றும் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை டிகேஎஸ் இளங்கோவன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.