ஆப்நகரம்

பணப்பட்டுவாடாவுக்கு முன்னுதாரணம் திமுக: சு.சுவாமி

ஆர்.கே.நகரில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை திமுக ஆரம்பித்து வைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 16 Dec 2017, 6:27 pm
ஆர்.கே.நகரில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை திமுக ஆரம்பித்து வைத்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil dmk introduced money for vote culture in rk nagar blames s swamy
பணப்பட்டுவாடாவுக்கு முன்னுதாரணம் திமுக: சு.சுவாமி


சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இருப்பினும் ஆர்.கே.நகரில் லட்சக்கணக்கில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்துள்ளது. இன்று ஆர்.கே.நகரில் தேர்தல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பணப்பட்டுவாடாவைத் தொடங்கி வைத்ததே திமுகதான் என்றார். மேலும், 2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் சிறைக்குப் போகப்போவது உறுதி. அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைக்க 22 ஆண்டுகள் பாடுபட்டதாகவும் அவர் பீற்றிக்கொண்டார்.

அடுத்த செய்தி