ஆப்நகரம்

பிப்ரவரி 17 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்.. திமுக அறிவிப்பு!

பிப்ரவரி 17 முதல் 24ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யலாம் என திமுக அறிவித்துள்ளது.

Samayam Tamil 15 Feb 2021, 10:22 pm
தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
Samayam Tamil Duraimurugan


இந்நிலையில், திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கோவையில் பிரச்சாரத்தை தொடங்கும் மோடி.. தமிழகத்தில் குவியும் மத்திய அமைச்சர்கள்!
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி 17 முதல் 24ஆம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை அண்ணா அறிவாலயத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.25,000 கட்டணம் செலுத்த வேண்ட்ம். தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோரும் பெண்களும் ரூ.15,000 கட்டணமாக செலுத்த வேண்டும்.

சட்டமன்ற தேர்தல்.... உலகநாயகன் கட்சியின் விருப்ப மனு கட்டணத்தை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு விண்ணப்பக் கட்டன் திருப்பித்தரப்படும் எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மண்டல வாரியாக விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டு வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் விருப்ப மனுத் தாக்கல் செய்யலாம் என ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி