ஆப்நகரம்

என்னுடைய நீக்கத்திற்கு பின்னணி இவங்க தான்; அதிர்ச்சி தகவல் வெளியிட்ட கராத்தே தியாகராஜன்!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியில் இருந்து நீக்கப்பட, இவர்கள் தான் முக்கிய காரணம் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Jul 2019, 3:09 pm
சமீபத்தில் நடந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில், தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் இரு கட்சிகளும் மகத்தான வெற்றி பெற்றன. ஆனால் அதன் பிறகு மெல்ல உரசல் தொடங்கியது.
Samayam Tamil Karate Thiagarajan


இருகட்சியினரும் மாறி, மாறி சீண்டத் தொடங்கினர். முன்னதாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசிய காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன், விரைவில் தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

இது திமுகவிற்கு அதிர்ச்சியை அளித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குடிநீர் பிரச்னை தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வரும் இடைத்தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டும்.

கால அவகாசம் கேட்கும் தேர்தல் ஆணையத்தை விளாசிய ஸ்டாலின்!

இனியும் காங்கிரஸிற்கு திமுக பல்லக்கு தூக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய கராத்தே தியாகராஜன், திருச்சி மக்களவை தொகுதியில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார்.

முக ஸ்டாலின் குடும்பத்தில் சம்பந்தியாகும் அதிமுக பெரும்புள்ளி!!

அதற்கு தனது செல்வாக்கு தான் காரணம் என்று கூறியிருந்தார். இதற்கு தான் கே.என்.நேரு பதில் கூறியிருப்பதாக கொளுத்திப் போட்டார். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, தென் சென்னை மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம் செய்யப்பட்டார்.

அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறார் சூர்யா- கடம்பூர் ராஜு காட்டம்!

இந்த சூழலில் நேற்று கராத்தே தியாகராஜன் இல்லத்தில், தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், என்னை நீக்கியதற்கு பின்னால் இருந்து செயல்பட்டது திமுக தான் என்று கூறியுள்ளார்.

இது தமிழக அரசியலில் அடுத்தக்கட்ட சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

அடுத்த செய்தி