ஆப்நகரம்

செயற்கை சுவாசக் குழாய் அகற்றம்; பேசத் தயாராகும் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் குழாய் அகற்றப்பட்டதை அடுத்து, பேச்சுப் பயிற்சிக்கு தயராகி வருவதாக செய்திகள் வந்துள்ளன.

Samayam Tamil 15 Feb 2018, 5:33 pm
திமுக தலைவர் கருணாநிதிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் குழாய் அகற்றப்பட்டதை அடுத்து, பேச்சுப் பயிற்சிக்கு தயராகி வருவதாக செய்திகள் வந்துள்ளன.
Samayam Tamil dmk leader karunanidhi will speak soon
செயற்கை சுவாசக் குழாய் அகற்றம்; பேசத் தயாராகும் கருணாநிதி


கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், திமுக செயல்தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக, செயற்கையாக சுவாசம் செய்ய ட்ரக்யோ்டமி என்ற கருவி அவரது தொண்டையில் பொருத்தப்பட்டது.

இதனால், கருணாநிதிக்கு பேசுவது தடைபட்டு சுயநினைவும் பாதிக்கப்பட்டு ஓராண்டு ஓய்வில் இருந்தார். இந்நிலையில், தற்போது உடல்நிலை ஆரோக்கியம் அடைந்ததை அடுத்து, தன்னை பார்க்க வருபவர்களை கையசைவு மூலம் வரவேற்கிறார்

தொடர்ந்து கருணாநிதிக்கு சுயமாக சுவாசிக்கும் பலம் வந்ததை உறுதி செய்த மருத்துவர்கள், அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச
குழாயை அகற்றி, சிறிய அளிவிலான குழாயை பொருத்தியுள்ளனர்.

இன்னும் சில நாட்கள் கழித்து, சிறிய குழாயும் அகற்றப்படும் பட்சத்தில், கருணாநிதி முன்பு போல் பேசுவதற்கு தயராகி விடுவார் என்று செய்திகள் வந்துள்ளன.

அடுத்த செய்தி