ஆப்நகரம்

ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா?

திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம் மகன் உயிரிழந்ததற்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Oct 2020, 4:17 pm
சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் மா.சுப்பிரமணியன். இவரது மகன் அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வைரஸ் பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை திடீரென உயிரிழந்தார்.
Samayam Tamil MK Stalin


இதையொட்டி மா.சுப்பிரமணியன் குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில் அருமைச் சகோதரர் மா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது.

திமுகவினர் அதிர்ச்சி - சைதை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மகன் உயிரிழப்பு!

ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை, மா.சுப்பிரமணியன் அவர்களும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியன் அவர்களும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்து வந்ததை கொரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.

மா.சு. இணையர்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா? செல்வன் அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி