ஆப்நகரம்

கொரோனா பாதிப்பால் மற்றொரு திமுக பிரமுகர் பலி - ஸ்டாலின் இப்படியொரு அஞ்சலி!

திமுகவைச் சேர்ந்த பலராமன் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 21 Jun 2020, 1:14 pm
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் கோவிட்-19 நோய்த் தொற்றால் காலாமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் ஆளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர்.
Samayam Tamil மு க ஸ்டாலின்


துறைமுகம் பகுதிச் செயலாளராக அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. பலராமன் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வருபவர்.

’தமிழ்நாடு இன்று’ - முக்கியச் செய்திகள் உடனுக்குடன் இங்கே...!

போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்திற்கு நிற்கும் தைரியசாலி. கழகத் தலைவராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியும், கழகத்தின் பொதுச்செயலாளராக பேராசிரியர் அன்பழகனும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றியவர்.

ஒரு இயக்கத்தின் தலைவரையும், பொதுச் செயலாளரையும் தேர்தலில் வெற்றி பெற பணியாற்றும் பெருமையைப் பெற்ற கழக முன்னணி நிர்வாகியாக விளங்கியவர். கருணாநிதி மீது மட்டுமின்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டுபவர்.

ஒட்டுமொத்தமாக எங்கள் குடும்பத்தோடும், கழகக் குடும்பங்களில் உள்ள அனைவரோடும் அன்பாகவும், பாசமாகவும் பழகக் கூடியவர். இன்றைக்கு அவரைக் கழகம் இழந்து நிற்கிறது. அவர் மறைந்தாலும் அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது.

தமிழகத்தில் தென்பட்ட 'நெருப்பு வளைய சூரிய கிரகணம்’ - எங்கெல்லாம் தெரியுமா?

எல் பலராமன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி