ஆப்நகரம்

கொஞ்சம்கூட கூச்சமே இல்லையா? -எடப்பாடியை விளாசும் ஸ்டாலின்!!

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.

Samayam Tamil 5 Jan 2020, 10:13 pm
மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேருவதற்கு, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் (நீட்) தேர்ச்சிப் பெற வேண்டியது அவசியம் என, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது.
Samayam Tamil கொஞ்சம்கூட உங்களுக்கு கூச்சமே இல்லையா -எடப்பாடியை விளாசும் ஸ்டாலின்


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெளிப்படும் தரவரிசைப் பட்டியலின்படியே (ரேங்க் லிஸ்ட்) எம்பிபிஎஸ் மாணவர் சேர்த்தை நடைபெற்று வந்தது.

இதன் காரணமாக, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் அவ்வப்போது வலியுறுத்தி வந்தது.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவியாக்கவில்லை. இதையடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரி, தமிழக சட்டப்பேரவையில் இரு மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இந்த மசோதாக்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இதன் விளைவாக, தமிழகத்திலும் தற்போது நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான (2020 -21) நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்னும் சில நாள்களில் நிறைவடைய உள்ளது. இந்த நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி, தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இரண்டு நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், அதை ரத்து செய்யக் கோரி அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது நாணமின்றி அரங்கேற்றப்படும் நடுப்பகல் நாடகம்!.

அடுத்த ஆண்டு NEET UG 2020 தேர்வுக்கான விண்ணப்பபதிவு தொடக்கம்!

நீட் மசோதாவுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முடியாத தோல்வியை மறைக்கவா? என ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், நீட் தேர்வுக்கு விலக்களிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற முடியாத படுதோல்வியை மறைக்கவே, தாமதமாக நினைவுக்கு வந்ததைப் போல, உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி நாணமின்றி நடுப்பகல் நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று தமது ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அடுத்த செய்தி