ஆப்நகரம்

MK Stalin:எங்களுக்கு 144 செல்லாதுன்னு முதல்வருக்கு தெரியாதா - திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு

காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

Samayam Tamil 25 May 2018, 12:03 pm
காஞ்சிபுரம், மதுராங்கத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
Samayam Tamil mk stalin


தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் கொடுமையானது. இன்று நடக்கும் முழு கடையடைப்பிற்கு திருமண மண்டபத்திற்கு விதிவிலக்கு உள்ளது.

ஏனெனில் எங்களை அடைப்பதற்கு சிறையில் இடமில்லை. அதனால் எங்களை திருமண மண்டபத்தில் அடைக்கலாம். அதோடு இங்கு திருமணம் செய்துள்ள இந்த மணமக்களுக்கு ஒரு சிறப்பான ஞாபகம் இருக்கும். எனக்கு திருமணம் நடந்த இடத்தில் தான் திமுக செயல் தலைவர், அந்த மண்டபத்தில் சிறையாக அடைக்கப்பட்டிருந்தார்.

நீதி கிடைக்காது:
நடந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் நீதிவிசாரணை நடத்த வேண்டும். ஆனால் பேட்டி கொடுத்த முதல்வரே, மக்கள் தாக்க வந்ததால் தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என நீதி விசாரணை தொடங்குவதற்கு முன்னரே பேசியுள்ளார்.

மேலும் அரசின் பேச்சு கேட்கும் நீதிபதியின் கீழ் விசாரணை நடந்தால் எப்படி நீதி கிடைக்கும்.

அங்கு 144 தடை இருக்கும் நிலையில் சட்டத்தை மதிக்காமல் நான் சென்றதாக முதல்வர் தெரிவித்துள்ளார். 144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்பது கூட தெரியாமல் முதல்வர் உள்ளார். ஆட்சியில் இருப்பவர்கள் விரைவில் எந்தெந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நாடு பார்க்கும் என்றும் கூறியுள்ளார்.
நாங்கள் தூத்துக்குடி சென்ற போது மக்கள் எங்களிடம் கேட்டுக் கொண்டது, இம்மாவட்ட ஆட்சியரையும், காவல்த்துறை கண்காணிப்பாளரையும் மாற்றவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி