ஆப்நகரம்

என்ன ஆச்சரியம்? மத்திய அரசுக்கு இப்படியொரு நன்றி தெரிவித்துக் கொண்ட ஸ்டாலின்!

தமிழகத்திற்கு வருகை புரியும் சீன அதிபரை மனதார வரவேற்கிறேன் என்றும், இந்திய - சீனப் பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்கும் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Oct 2019, 11:56 am
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பழம்பெருமையும், பண்பாடும் நாகரிகமும் கொண்டதும், மிக நீண்ட நிலப் பரப்பு கொண்டதும், உலகில் அதிக மக்கள் தொகை கொண்டது சீனா.
Samayam Tamil MK Stalin


அத்தகைய தேசத்தின் மேன்மைமிகு அதிபர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி ஜின்பிங் அவர்கள் தமிழகம் வருவது அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். அவர்களை வருக வருக என்று மனமார வரவேற்கின்றேன்.

ஸ்ரீபெரும்புதூரில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி!

இருபதாம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் புரட்சிகளில் ஒன்று சீனப்புரட்சி. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு லட்சக் கணக்கான மக்களுடன் சீனப் பெருந் தலைவர் மாவோ மகத்தான பேரணி நடத்தினார்.

இதையடுத்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய புரட்சி, 1949 ஆம் ஆண்டு சீனத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, அதைச் செஞ்சீனமாக மாற்றி, உலகத்தையே திரும்பிப் பார்த்திட வைத்தது. "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்று, மானுடத்திற்கு அரிய தத்துவத்தைத் தந்த மாவீரர் மாவோ.

பூம் பூம் மாட்டிடம் ஆசீர்வாதம் வாங்கிய அமைச்சர்!

முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதியால் முத்தான தமிழில் ஏற்றிப் போற்றிப் பாராட்டிப் புகழப்பட்ட புரட்சி நாயகர் மாவோ. அவர் வழியில் புயலாக வீசிய அந்த சீனப் புரட்சிதான், அடுத்தடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் உருவான சமூக, அரசியல்,பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்திய - சீன நல்லுறவுப் பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தைத் தேர்வு செய்த மத்திய அரசுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "தேசம் வேறு வேறு ஆனாலும், வானம் ஒன்றே.

‘மோடி வராரு, யாரும் வராதீங்க’: தமிழ்நாடு அரசு!

எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே" என்ற அடிப்படையில் அமையும் இந்தப் பேச்சுவார்த்தை இரண்டு தேசங்களுக்கு மட்டுமல்ல, உலக சமுதாயத்துக்கும் ஒளிதருவதாய் அமையட்டும் என்றும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி