ஆப்நகரம்

வெள்ள பாதிப்புகளால் தத்தளிக்கும் சென்னை - நேரில் களமிறங்கிய ஸ்டாலின்!

தொடர் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 25 Nov 2020, 4:34 pm
வங்கக் கடலில் அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிவர் புயல் காரணமாக சென்னையில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகள் வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன. அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பாதுகாப்பு காரணங்களைக் கருதி படிப்படியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Samayam Tamil dmk leader mk stalin visits flood hit areas in chennai
வெள்ள பாதிப்புகளால் தத்தளிக்கும் சென்னை - நேரில் களமிறங்கிய ஸ்டாலின்!


கரையை கடக்கும் புயல்

இதையொட்டி கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். பொதுமக்கள் வீடுகள் மற்றும் முகாம்களில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அரசு விடுமுறை

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருநாள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதையொட்டி இன்று நண்பகல் 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. தலைநகர் சென்னை முழுவதும் மழைநீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நிவர் புயலால் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் மக்களைத் தங்க வைப்பதற்கும், உணவு - குடிநீர் வழங்குவதற்கும், அவசர மருத்துவ உதவிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளையும் கழக உடன்பிறப்புகள் செய்திட வேண்டும்.


நிவர் புயல் முன்னெச்சரிக்கை; வைரலாகும் தமிழக முதல்வரின் சர்ச்சை போஸ்டர்!

மீண்டுமொரு வெள்ளத்தை எதிர்கொள்கிறதா சென்னை!

நேரில் களமிறங்கிய ஸ்டாலின்

அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுவோம். மக்களைக் காக்க ஒன்றிணைவோம். நிவாரணமாக அமையட்டும் கழகத்தினரின் உதவும் கரங்கள். மக்களைப் பாதுகாப்பது நமது கடமை என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.

நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்

பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள அனுபுஜபுரம், பெரம்பூர் ரமணா நகர், ஜவகர் தெரு, திரு.வி.க நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி நகர் பகுதிகளில் கொட்டும் மழையிலும் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவருடன் திமுக எம்.பி தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி