வெள்ளை வேட்டி, சட்டை சகிதம் கட்சி மேடைகளில், ஆர்ப்பாட்டங்களில் மட்டுமே பார்க்க முடிந்த மு.க.ஸ்டாலினை சைக்கிளிங் செல்பவர்களுக்கான உடை, ஷூ, ஹெல்மட் ஆகியவற்றோடு தற்போது சென்னை புறநகரில் அடிக்கடி பார்க்க முடிகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவும் இந்தப் பணிகளை வெகு சீக்கிரமாகவே தொடங்கி செய்துவருகிறது. யுத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக பணியாற்றுவதால் புதிய புதிய பாணியில் பிரச்சாரங்கள், கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்? க்ளு கொடுத்த எடப்பாடி!
உடல்நலம் பேணும் விதமாக அவர் இதை செய்துவந்தாலும் பிரசாந்த் கிஷோர் டீமின் யோசனைதான் இது என்கின்றனர் அக்கட்சி வட்டாரங்களில். எழுபதை நெருங்கும் மு.க.ஸ்டாலின் தான் ஒரு இளைஞராக துடிப்புடன் செயல்படுகிறேன் என்பதைக் காட்டவே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்கின்றனர்.
இன்று சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் மு.க.ஸ்டாலின் வழக்கம்போல் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது இளைஞர்கள் சிலர் முகக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி மு.க.ஸ்டாலின் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கியுள்ளார். இந்த காட்சி இணையத்திலும் வெளியாகியுள்ளது.
பண்டிகை கால கொண்டாட்டம் கொரோனாவுக்கு வழி வகுக்குமா?
தற்போது இந்த வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இளைஞர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியது வரவேற்கத்தக்கதே. ஆனால் அறிவுரை வழங்கும்போது ஸ்டாலினும் முகக்கவசம் அணிந்திருந்தால் இளைஞர்களுக்கு முன்னுதாராணமாக இருந்திருக்கும் என கூறி நெட்டிசன்கள் கமெண்டுகளை தட்டிவிடுகின்றனர். ஒருவேளை அறிவுரை கூறுவது ஸ்டாலின் என்பது தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாக முகக்கவசம் இல்லாமல் சொன்னாரா என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவும் இந்தப் பணிகளை வெகு சீக்கிரமாகவே தொடங்கி செய்துவருகிறது. யுத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்காக பணியாற்றுவதால் புதிய புதிய பாணியில் பிரச்சாரங்கள், கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வாரத்தில் மூன்று நாட்கள் காலை நேரத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் சைக்கிளில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சசிகலாவை சந்திக்க தயாராகும் அமைச்சர்கள்? க்ளு கொடுத்த எடப்பாடி!
உடல்நலம் பேணும் விதமாக அவர் இதை செய்துவந்தாலும் பிரசாந்த் கிஷோர் டீமின் யோசனைதான் இது என்கின்றனர் அக்கட்சி வட்டாரங்களில். எழுபதை நெருங்கும் மு.க.ஸ்டாலின் தான் ஒரு இளைஞராக துடிப்புடன் செயல்படுகிறேன் என்பதைக் காட்டவே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்கின்றனர்.
இன்று சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் மு.க.ஸ்டாலின் வழக்கம்போல் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அப்போது இளைஞர்கள் சிலர் முகக்கவசம் அணியாமல் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நிறுத்தி மு.க.ஸ்டாலின் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கியுள்ளார். இந்த காட்சி இணையத்திலும் வெளியாகியுள்ளது.
பண்டிகை கால கொண்டாட்டம் கொரோனாவுக்கு வழி வகுக்குமா?
தற்போது இந்த வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இளைஞர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை வழங்கியது வரவேற்கத்தக்கதே. ஆனால் அறிவுரை வழங்கும்போது ஸ்டாலினும் முகக்கவசம் அணிந்திருந்தால் இளைஞர்களுக்கு முன்னுதாராணமாக இருந்திருக்கும் என கூறி நெட்டிசன்கள் கமெண்டுகளை தட்டிவிடுகின்றனர். ஒருவேளை அறிவுரை கூறுவது ஸ்டாலின் என்பது தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாக முகக்கவசம் இல்லாமல் சொன்னாரா என்றும் பதிவிட்டு வருகின்றனர்.