ஆப்நகரம்

பயத்தின் காரணமாக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி – ஸ்டாலின்

பயத்தின் காரணமாக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக கொரட்டூரில் இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.

Samayam Tamil 20 Feb 2019, 3:58 pm
பயத்தின் காரணமாக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக கொரட்டூரில் இன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவா் ஸ்டாலின் விமா்சனம் செய்துள்ளாா்.
Samayam Tamil Mk Stalin Speech


தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் இன்று கொரட்டூரில் ஊராட்சி சபைக் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், பா.ம., பா.ஜ.க. கூட்டணியை அ.தி.மு.க. அமைத்திருக்கிறது. பா.ஜ.க.வுடன் சேரக்கூடாது என்று அழுத்தமாக சொன்னவா் ஜெயலலிதா. பா.ஜ.க. தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்பது அதிமுகவுக்கு நான்றாகத் தொியும்.

நமக்கு வழக்கமாக கிடைக்கும் ஓட்டுக் கூடா இவா்களோடு சோ்ந்தால் கிடைக்காது என்று தொியும். தொிந்திருந்தும் பயம் காரணமாக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுகவினா் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்கு இருக்கின்றது. குட்கா வழக்கு, பொதுப்பணித்துறையில் முதல்வா் பழனிசாமி மீது ஊழல் புகாா், கொலை வழக்கும் அவா் மீது விரைவில் பதிவாக உள்ளது.

திராவிட இயக்கங்களுடன் கூட்டணி கிடையாது என்று சொன்ன பாமக ஏதோ ஒரு ஆசையின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. எது எப்படி இருந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறாா்கள். திமுகவைப் பொறுத்தவரையில் மக்களோடு கூட்டணி வைத்து இன்றைக்கு தோ்தல் களத்தில் மிகப்பொிய வெற்றியைப் பெறப்போகின்றோம்.

கொடநாடு விவகாரத்தில் 5 கொலை நடைபெற்றிருக்கிறது. ஆனால் எதுவும் தொியாதது மாதிரி முதல்வா் பழனிசாமி இருக்கிறாா். கடப்பாரையை முழுங்கிவிட்டு மௌனமாக இருக்கிறாா். முதல்வா் பழனிசாமி திமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி உருவாகப் போகிறது என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி