ஆப்நகரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் படுதோல்வி குறித்து திமுக இன்று ஆலோசனை!

ஆர்.கே.நகரில் படுதோல்வி அடைந்தது குறித்து திமுக இன்று ஆலோசனை நடத்துகிறது.

TNN 29 Dec 2017, 10:33 am
சென்னை: ஆர்.கே.நகரில் படுதோல்வி அடைந்தது குறித்து திமுக இன்று ஆலோசனை நடத்துகிறது.
Samayam Tamil dmk meets today to discuss about rknagar byelection
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் படுதோல்வி குறித்து திமுக இன்று ஆலோசனை!


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இதற்காக நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார்.

திமுக வேட்பாளர் மருது கணேஷ் டெபாசிட் இழந்து, படுதோல்வி அடைந்தார். இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த திமுக கொறடா சக்கரபாணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வரும் 31ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்கிறது.

இந்நிலையில் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையி இன்று உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.

மாலை 5 மணிக்கு தொடங்க உள்ள கூட்டத்தில், ஒழுங்காக பணியாற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும் கனிமொழிக்கு புதிதாக பொறுப்புகள் அளிப்பது குறித்தும் முடிவு செய்யப்படவுள்ளது.

DMK meets today to discuss about RKNagar ByElection.

அடுத்த செய்தி