ஆப்நகரம்

மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டியுள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Nov 2020, 9:00 pm
சென்னை: மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டிற்கு மிகவும் காலதாமதமாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil ஸ்டாலின்
ஸ்டாலின்


மருத்துவ மேற்படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டையும் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்று தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மிகவும் காலதாமதமாக இப்போது அதிமுக அரசு ஆணை வெளியிட்டு இருக்கிறது. சமூகநீதியை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ள அதிமுக அரசிடம் ஒவ்வொரு முறையும் இடஒதுக்கீடு உரிமையைப் போராடிப் பெற வேண்டிய அவல நிலைமை தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குரல் எழுப்பிய பிறகே அதற்கு ஒப்புதல் தெரிவித்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், இந்த உள் இடஒதுக்கீடு 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் செயல்படுத்தப்படாது என்ற அதிமுக அரசின் முடிவுக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உள் ஒதுக்கீட்டுல டாக்டர் சேர்ந்தவங்க ஹவ் மெனி? ஐகோர்ட் கேள்வி

உள் இடஒதுக்கீடு என்று அறிவித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் காவு கொடுத்திருப்பது மன்னிக்க முடியாத துரோகம். ஆகவே மருத்துவ உயர் சிறப்புப் படிப்புகளில், சமூகநீதியின் பயனை அரசு மருத்துவர்கள் பெறும் வகையில் 69 சதவீத இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமியை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி