ஆப்நகரம்

திமுக ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம்!

திமுக சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Samayam Tamil 10 Jun 2020, 12:56 pm
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் 12 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.
Samayam Tamil j anbazhagan


பின்னர் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையிலிருந்து கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு வாகனத்தில் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அவரது குடும்பத்தினரிடம் அவரது உடல் கொடுக்கப்படவில்லை. வேறு எந்த சடங்குகளுக்கும் அனுமதியளிக்கப்படவில்லை. ஜெ.அன்பழகன் மட்டுமல்லாமல் அவரது மனைவி, மகள், மகன், தம்பி என குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது இறப்பு நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


திமுக எம்.எல்.ஏ அன்பழகன் காலமானார்!

மாநகராட்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் உடல் அடக்கப் பணிகளை மேற்கொண்டனர். காலையிலேயே இதற்கான பணிகளை அவர்கள் முன்னெடுத்தனர். ஜேசிபி இயந்திரம் கொண்டு 15 அடி ஆழ குழி தோண்டப்பட்டது. அன்பழகனின் தந்தை ஜெயராமன் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே குழி வெட்டப்பட்டது.

ஜெ.அன்பழகன் கடந்து வந்த பாதையும், கலைஞரின் நட்பும்!

சுடுகாட்டுக்கு செல்லும் சாலைகள், அருகிலுள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. காலை முதலே மருத்துவமனை முன்பும், கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு முன்பும் திமுகவினர் குவியத் தொடங்கினர்.

இருப்பினும் சுடுகாட்டுக்குள் திமுக தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் திமுகவினர் கண்ணீர் அஞ்சலி செலுத்த அவர் உடல் 1 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

அதே நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள் அன்பழகனின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த செய்தி