ஆப்நகரம்

கருணாஸை நலம் விசாரித்த திமுக எம்எல்ஏ அன்பழகன்!

கருணாஸை திமுக எம்எல்ஏ., அன்பழகன் நேரில் சென்று நலம் விசாரித்தார்

Samayam Tamil 3 Oct 2018, 4:28 pm
நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அதிமுக எம்எல்ஏ., கருணாஸை திமுக எம்எல்ஏ., அன்பழகன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
Samayam Tamil dmk anbalagan


எம்எல்ஏ கருணாசை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், கடந்த மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஜாதி ரீதியாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்தாகவும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ ரத்தின சபாபதியை, கருணாஸ் சந்தித்தார். அப்போது அவர், முதல்வர் மற்றும் துணைமுதல்வரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அனுமதியின்றி பேனர் வைத்தது, சாமானிய மக்கள் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவைகளை குறிப்பிட்டு கடுமையாக சாடினார்.

இந்நிலையில், இன்று காலை நெஞ்சு வலியால் அவதிப்பட்ட கருணாஸ் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரை மற்றொரு வழக்கின் கீழ் கைது செய்ய நெல்லை போலீசார் நேற்று திட்டமிட்டிருந்தனர். இதனால், அவரது வீட்டை இன்று காலை போலீசார் நீண்ட நேரமாக சோதனையிட்டனர். இதனிடையே கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து, திமுக எம்எல்ஏ அன்பழகன் கருணாஸை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

அடுத்த செய்தி