ஆப்நகரம்

மதுரை இரண்டாவது தலைநகரமா? அப்செட் ஆகிய திமுக எம்எல்ஏ...

தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை முன்மொழிந்ததற்காக அதிமுகவை திமுக எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 17 Aug 2020, 6:23 pm
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தை இரண்டாவது தலைநகரமாக மாற்ற எம்ஜிஆர் ஆட்சியிலேயே தீர்மானிக்கப்பட்டு பின்னர் அதற்கான முயற்சிகள் பல்வேறு காரணங்களால் நிறைவேற்றப்படாமல் கைவிடப்பட்டது.
Samayam Tamil mla palanivel thiagarajan


இந்நிலையில், மதுரையை இரண்டாவது தலைநகராக உருவாக்க அதிமுக தீர்மானித்திருப்பதை திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாக ராஜன் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். '' சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களிலேயே ஆளும் கட்சி ஏன் இத்தகைய கோரிக்கையை முன்வைக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நிச்சயமாக, எல்லோரும் மதுரைக்கு அதிக முதலீடு மற்றும் தொழில் நிறுவனங்களை கொண்டு வர விரும்புகிறார்கள்.

ஆனால், அதிமுக அமைச்சர்கள் இவ்வளவு தாமதாமாகவும், தேர்தல் வரும் இந்த நேரத்தில் ஏன் முடிவு எடுக்கிறார்கள்? அவர்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளனர். 9.5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோசனை ஏன் வருகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை இரண்டாவது தலைநகராக மாற்ற வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் விருப்பம்.

ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தாமரை மலராது: நாஞ்சில் சம்பத் தடாலடி

இந்த காரணத்தினால்தான் உலக தமிழ் மாநாடும் இங்கு நடைபெற்றது. ஜெயலலிதாவும் தனது அரசியல் தொடர்பான முக்கிய முடிவுகளை மதுரையில் வைத்து தீர்மானித்துள்ளார். மதுரையில் அழிந்து வரும் உள்கட்டமைப்பு குறித்து அரசாங்கம் அக்கறை கொள்ள வேண்டும், கழிவுநீர் மற்றும் நீர் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள், இவை எதுவும் கடந்த பத்து ஆண்டுகளில் கவனம் செலுத்தப்படவில்லை.

நகரத்தின் தலைநகரம் அல்லது சிறந்த நகரம் என்று பெயரிடுவதை விட, நகரத்தின் வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி