ஆப்நகரம்

எப்படியாவது ஆட்சிய கலைக்கனும்; சபாநாயகரை சந்திக்கும் திமுகவினர்!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாளை சபாநாயகர் தனபாலை சந்திக்க உள்ளனர்.

TNN 10 Sep 2017, 9:42 am
சென்னை: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நாளை சபாநாயகர் தனபாலை சந்திக்க உள்ளனர்.
Samayam Tamil dmk mlas will meet assembly speaker
எப்படியாவது ஆட்சிய கலைக்கனும்; சபாநாயகரை சந்திக்கும் திமுகவினர்!


தமிழகத்தை ஆளும் அதிமுக பெரும்பான்மை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு, டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் பரபரப்பு காட்டத் தொடங்கினர். முதலமைச்சர் பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவ் நல்ல முடிவை எடுப்பார் என்று டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அமைதி காத்து வருகின்றனர். இதற்கிடையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரை சந்தித்து, அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தினர்.

ஆளுநர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் ஆளுநர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் இன்று மாலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் ஆளுநரை மீண்டும் சந்தித்து முறையிட உள்ளனர்.

இந்நிலையில் நாளை சபாநாயகர் தனபாலை சந்திக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அப்போது சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மனு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

DMK MLAs will meet Assembly Speaker.

அடுத்த செய்தி