ஆப்நகரம்

Sathankulam Custodial Death: விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் மரணம்; கனிமொழி செஞ்ச அதிரடியைப் பாருங்க!

சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கனிமொழி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

Samayam Tamil 26 Jun 2020, 9:56 am
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னீக்ஸ் ஆகியோர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த சூழலில் கடந்த 19ஆம் தேதியன்றி கடையடைப்பது தொடர்பாக பென்னீக்ஸிற்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு விசாரணை நடத்திவிட்டு கோவில்பட்டி சப் ஜெயிலில் அடைத்துள்ளனர். இதையடுத்து உடல்நலக் குறைவால் மகன் மற்றும் தந்தை அடுத்தடுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil கனிமொழி


இந்த சம்பவத்தின் பின்னணியில் போலீசார் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதே காரணம் என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதைக் கண்டித்து இன்று ஒருநாள் தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படுகிறது. மருந்து கடைகள் 4 மணி நேர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

தூத்துக்குடி கஸ்டடி மரணத்தில் புதிய சர்ச்சை - போலீசாரே ஒப்புக் கொள்ளும் போது முதல்வர் மறுப்பது ஏன்?

இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குற்றச் செயலில் ஈடுபட்ட போலீசாருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி கனிமொழி அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அவர் அளித்துள்ள புகாரில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது பென்னீக்ஸை கையாண்ட விதம் மனித உரிமை மீறல் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21க்கு புறம்பாக செயல்பட்டுள்ளனர்.

மேலும் மேற்கு வங்க மாநிலத்தின் டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை போலீசார் சிறிதும் பின்பற்றவில்லை. இதேபோல் தமிழக அரசு பிறப்பித்துள்ள காவல்துறையினருக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் மீறியிருக்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் 15க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் ஒன்றில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த விஷயத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாத்தான்குளம்: தந்தை, மகன் இருவரது உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

அவ்வாறு செய்தால் தான் காவல்துறை விசாரணையில் இனி எந்தவொரு உயிரும் போகாமல் பார்த்துக் கொள்ள முடியும். இந்த விவகாரத்தில் மனித உரிமைகளை மீறிச் செயல்பட்ட அனைத்து அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி