ஆப்நகரம்

திருப்பதி தேவஸ்தானத்தில் கதிர் ஆனந்த்: சேகர் ரெட்டி சொல்லும் நண்பேண்டா..

திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் கதிர் ஆனந்த்.

Samayam Tamil 29 Jan 2022, 2:59 pm
அதிமுக ஆட்சியோ, திமுக ஆட்சியோ யார் வந்தாலும் அதிகாரத்துக்கு நெருக்கமாக சில அதிகாரிகள் இருப்பதை பார்த்திருக்கலாம். பெரும்பாலான தொழில் அதிபர்களும் எந்த கட்சியையும் பகைத்துக் கொள்வதில்லை. அப்படியான ஒருவர் தான் சேகர் ரெட்டி எனும் ஏ.ஜெ.சேகர் என்கிறார்கள்.
Samayam Tamil Kathir Anand


அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் சேகர் ரெட்டி. தற்போது திமுக ஆட்சியிலும் அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் பக்கம் சென்றுள்ளார் என்கிறார்கள்.

சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அமைந்துள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோயிலின் உள்ளூர் ஆலோசனைக் குழு துணைத் தலைவராக கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

பாஜக போடும் கேடிஆர் பிளான்: இதை மட்டும் கொடுத்துருங்க போதும்!

திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர். தந்தை மாநில அரசியலில் மிக முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில் டெல்லி அரசியலுக்கு சென்றார் கதிர் ஆனந்த். ஆனால் அவரது எண்ணமெல்லாம் காட்பாடியை சுற்றியே வலம் வருவதாக சொல்கிறார்கள். வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் பதவியை பெற்றுவிட வேண்டும் என துடிக்கிறாராம். அதற்கான காய் நகர்த்தல்களும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறதாம்.

இந்த சூழலில் தான் திருப்பதி தேவஸ்தானத்தின் உள்ளூர் ஆலோசனைக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தனது இருப்பை காட்டும் விதமாக இந்த பதவி அவருக்கு கிடைத்துள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் சேகர் ரெட்டிதான் என்கிறார்கள்.
மிரட்டும் திமுக; நிறுத்திக்கோங்க: கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி
தி.நகர் திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் கோயிலின் ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டிதான். அவரது முயற்சியாலே இந்த பதவி கதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ளது. இருவரும் காட்பாடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் நெருக்கம் காட்டுகிறார்களாம். இந்த நெருக்கத்தில் இருவருக்குமே ஆதாயம் இருப்பதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அடுத்த செய்தி