ஆப்நகரம்

இளைஞருக்கு 5 லட்சம் உதவி: ட்விட்டரில் நிதி திரட்டிய திமுக எம்பி!

சாயல்குடியைச் சேர்ந்த முத்தமிழ் என்பவருக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்காக திமுக எம்.பி செந்தில்குமார் ட்விட்டர் மூலம் 5 லட்சம் நிதி திரட்டினார்.

Samayam Tamil 9 Nov 2020, 2:58 pm
சமூக வலைதளங்கள் மூலம் மக்களை எளிதாக சென்றடையலாம். அதே போல் மக்களும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல், திரை பிரபலங்கள் உள்ளிட்டோரை எளிதாக சமூக வலைதளங்கள் மூலம் உரையாட முடியும்.
Samayam Tamil dmk mp senthil kumar


சமூக வலைதளப் பக்கங்களையே தங்களுக்கான ஊடகமாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மாற்றியுள்ளனர். அந்தவகையில் தருமபுரி தொகுதி திமுக எம்.பி மருத்துவர் செந்தில்குமார் ட்விட்டரில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்.

இந்நிலையில் நவம்பர் 5ஆம் தேதி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடியை சேர்ந்த இளைஞர் முத்தமிழ்செல்வன் என்பவர் ரயில் விபத்து ஒன்றில் தனது இரண்டு கால்களை இழந்து விட்டதாகவும், அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் தமிழ்ச்செல்வனுக்கு 5 லட்சம் மதிப்பிலான 2 புரோஸ்தெடிக் செயற்கை கால்கள் பொருத்துவதற்கு உதவ வேண்டும் என கேட்டிருந்தார்.

திமுக ஜாதகம் ஐ பேக் கையில்: ஆபத்தை உணர்வாரா ஸ்டாலின்?

250 பேர் தலா ரூ. 2000 பங்களிப்போம் எனவும் கூறி, மருத்துவ ஆவணங்களை இணைத்திருந்தார். அத்துடன், #Prosthesishelp ஹேஷ்டேக்கை அனுப்புவோருக்கு அவர் வங்கி விவரங்களை அனுப்புவதாகவும் தெரிவித்தார். அதன்பிறகு பலரும் அவர் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு தலா 2,000 ரூபாய் பணம் அனுப்பிவந்தனர்.

பணம் அனுப்பும் ஒவ்வொருவருடைய விவரங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தி வந்தார். இரண்டரை நாட்களுக்குள் முத்தமிழ் செல்வனின் வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் நிதி திரண்டது. இதன்மூலம் அவர் செயற்கைக் கால் பெறும் வாய்ப்பையும் பெற்றார்.

தமிழக கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

இதுபற்றி திமுக எம்.பி. செந்தில்குமார், “ட்விட்டர் நண்பர்களுக்கு நன்றி. முத்தமிழுக்கு உதவ நாம் ரூ.5 லட்சம் என்ற இலக்கை இரண்டரை நாட்களுக்குள் எட்டியுள்ளோம். உங்கள் ஆதரவும் உதவியும் இல்லாமல் சாத்தியமில்லை” என்று நன்றி தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பியின் முன்னெடுப்பின் காரணமாக சாயல்குடி இளைஞர் விரைவில் செயற்கை கால்களை பெறவுள்ளார்.

அடுத்த செய்தி