ஆப்நகரம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.

TNN 15 Oct 2016, 4:33 pm
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்கவுள்ளனர்.
Samayam Tamil dmk mps meet president about cauvery issue
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு


காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான விசாரணையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முந்தைய நாளில்,காவிரி நதி நீர் பங்கீடு #CauveryIssue விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.

அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்த வேண்டும். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரமில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை #CauveryManagementBoard உடனடியாக அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், மத்திய அரசின் வாதத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குடியரசு தலைவரை அவர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DMK MP's meet President about cauvery issue #CauveryManagementBoard

அடுத்த செய்தி