ஆப்நகரம்

TN Assembly: தமிழகத்துக்கு வழங்கப்படாத ரூ. 7669 கோடி வரி வருவாய்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றி வருகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கிவரும் அவர், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

Samayam Tamil 2 Jan 2019, 11:15 am
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றி வருகிறார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கிவரும் அவர், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
Samayam Tamil governer


தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். அவர் கூறுகையில் ’ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்மூறையீடு செய்யும். பொங்கல் பரிசால திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ. 1000 வழங்கப்படும்.

தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் குடிசைகளை மேம்படுத்த புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களைத் தயாரிக்க சலுகைகள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும். புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்படும் என ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்வச் பாரத் திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்கப்படும். பழங்குடியினரின் எழுத்தறிவு குறைவாக உள்ளது. அவர்களுக்காக புதிய பள்ளிகள் கட்டப்படும்.

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. கஜா புயல் நிவாரண நிதியை மத்திர அரசிடம் இருந்து பொற முடியவில்லை என திமுக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மத்திய அரசின் தாமதத்தால் மாநிலத்தில் நிதி தட்டுப்பாடு ஏற்படுகிறது. தமிழகத்துக்கு ரூ. 7669 கோடி வரி வருவாய் இதுவரை வழங்கப்படவில்லை.

அடுத்த செய்தி