ஆப்நகரம்

தேர்தலை சந்திக்க தயாராகும் தி.மு.க., : யாருக்கும் ஆதரவு இல்லை!

அ.தி.மு.க.வின் இரு அணிக்கும் ஆதரவு தரப்போவதில்லை, தேர்தலை சந்திக்கவே தி.மு.க., தயாராக உள்ளது.

TOI Contributor 16 Feb 2017, 11:12 am
சென்னை: அ.தி.மு.க.வின் இரு அணிக்கும் ஆதரவு தரப்போவதில்லை, தேர்தலை சந்திக்கவே தி.மு.க., தயாராக உள்ளது.
Samayam Tamil dmk not supporting any of two aiadmk and also ready for election
தேர்தலை சந்திக்க தயாராகும் தி.மு.க., : யாருக்கும் ஆதரவு இல்லை!


தமிழக அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பத்தால் ஆளும் அ.தி.மு.க., கட்சி ஓ.பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக உடைந்தது.
தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு 10 எம்.எல்.ஏ.க்களும்,

சசிகலா அணி சார்பாக 120 எம்.எல்.ஏ.,க்களும் ஆதரவாக உள்ளனர். இவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை தான் ஆதரிப்போம் என்று கூறிவருகின்றனர். இதனால், இவர்கள் இரு அணிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒருவரை மற்றொருவர் கவிழ்க்கும் நிலை தான் உள்ளது.

அ.தி.மு.க.வில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால், எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. தி.மு.க.வில் 89 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளை சேர்த்து (காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ) மொத்தம் 98 எம்.எல்.ஏ.க்களின் பலம் தி.மு.க.வுக்கு உள்ளது.

ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ள போதும் தி.மு.க. தொடர்ந்து அமைதியாக உள்ளது. இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க்.ஸ்டாலின் கூறுகையில் ,‘சட்டமன்றத்தில் தான் நாங்கள் எதிர்க்கட்சி. சட்டமன்றத்துக்கு வெளியே அ.தி.மு.க.வுக்கு நாங்கள் எதிரிக்கட்சி’. இதனால் திமுக., இரு அணிகளுக்கும் ஆதரவு இல்லை என தெளிவாக தெரிகிறது. ஆனால் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க கவர்னர் அழைப்பு விடுக்க வாய்ப்பு இருப்பதால்,முன்கூட்டியே சென்னையில் வந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருக்க வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி