ஆப்நகரம்

“புதிய கல்விக் கொள்கை”க்கு ஏதிரான ஆர்பாட்டத்தில் திமுக பங்குபெறும்

சென்னை: பாஜக அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்வி கொள்ளையை நிராகரிக்கும் போராட்டத்தில் திமுக பங்குபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2016, 3:56 pm
சென்னை: பாஜக அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்வி கொள்ளையை நிராகரிக்கும் போராட்டத்தில் திமுக பங்குபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil dmk participated in protest against new education policy
“புதிய கல்விக் கொள்கை”க்கு ஏதிரான ஆர்பாட்டத்தில் திமுக பங்குபெறும்


இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: "மாநில உரிமைகளை ஆக்கிரமித்துப் பறித்துக் கொண்ட அதிகாரத்தின் மூலம், “புதிய கல்விக் கொள்கை” என்ற பெயரில், மத்திய பா.ஜ.க. அரசு, தனது மறைமுக “அஜெண்டா”வை நடைமுறைப்படுத்தி அதை மாநிலங்களின் மீது திணிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்த முயற்சி இந்திய அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள “சோஷலிச, மதச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு” என்ற மிக உன்னதமான கருத்தாக்கத்தை மறுதலிப்பதாக உள்ளது. அப்படிப்பட்ட புதிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வருமாயின், மாணவர்களிடையே பாகுபாடு - விரக்தி மனப்பான்மை, ஆசிரியர்களிடையே சலிப்புணர்வு படிந்து, குலக் கல்வி மீண்டும் உயிரூட்டம் பெற்று; இந்தியக் கல்வியின் கதவுகளை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அகலத் திறந்து அனுமதித்து; கல்வியில் மீள முடியாத பெரும் பின்னடைவு ஏற்பட்டு விடும். தி.மு. க பொறுத்தவரை புதிய கல்விக் கொள்கை குறித்து திடமான அணுகுமுறை உண்டு.
அதன் அடிப்படையிலே தான் 29-7-2016 அன்று திராவிடர் கழகம் விடுத்த அழைப்பினை ஏற்று கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வி.பி. துரைசாமி அவர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி, 8-8-2016 திங்கட்கிழமை அன்று, சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் கலந்து கொள்வதென முடிவு செய்திருக்கிறது" என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த செய்தி