ஆப்நகரம்

கொரோனா தடுப்பு: ஸ்டாலின் அறிவித்த ஒரு கோடி நிதி!

திமுக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க உள்ளது.

Samayam Tamil 30 Mar 2020, 11:45 am
கொரோனா வைரஸ் தமிழ்நாட்டிலும் பாரபட்சம் இல்லாமல் தாக்கி வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Samayam Tamil ஸ்டாலின் அறிவித்த ஒரு கோடி நிதி


தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டத்திலிருந்து மூன்றாம் கட்டமான சமூக தொற்றாக மாறுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு 8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என சோதனை நடைபெற்றுவருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்க்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் உதவி புரிந்துவருகின்றனர்.

கொரோனா: தமிழ்நாட்டில் இன்றைய நிலவரம் என்ன?

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஒரு கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தத் தொகை ஆன்லைன் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரன நிதியாக வழங்குவார்கள் என்று அறிவித்திருந்தார்.

இதேபோல் நாடு முழுவதும் தொழிலதிபர்கள், திரையுலகினரிலிருந்து பாமர மக்கள் வரை பல தரப்பினரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி செய்து வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளதுடன் அனைத்து மாவட்டங்களிலும் நிலைமை எப்படி உள்ளது என்பதை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் கேட்டறிந்தார்.

அடுத்த செய்தி