ஆப்நகரம்

துரை முருகனை திட்டியதால் பறிபோன பதவி!

திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை தற்காலிகமாக நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 25 Sep 2019, 3:51 pm
திமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரனை தற்காலிகமாக நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil Untitled collage (3)


விக்கிரவாண்டித் தொகுதியில் திமுக சார்பாக நா.புகழேந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பணியாற்றிய குடியாத்தம் குமரன் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இன்று (செப்டம்பர் 25) திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும்வகையிலும் செயல்பட்டுவந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் நீக்கத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய திமுக வட்டாரத்தில் விசாரித்தோம். முன்னாள் அமைச்சரும் திமுக பொருளாளருமான துரை முருகனுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார் குடியாத்தம் குமரன். இவரது சிபாரிஸின் மூலமாகவே கருணாநிதி தலைவராக இருக்கும்போது இவருக்கு துணை கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சமீபகாலமாக துரை முருகன் தரப்புக்கும் குடியாத்தம் குமரனுக்கும் மனகசப்பு இருந்துவந்துள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தலின் போதும் இது தொடர்ந்துள்ளது. இந்நிலையில் குடியாத்தம் குமரன் மது அருந்திவிட்டு திமுக தொண்டர்கள் மத்தியில் துரை முருகனை திட்டிப் பேசியுள்ளார். அந்த ஆடியோ வெளியாகி திமுக தலைமை கவனத்துக்கு சென்றுள்ளது. அதைத் தொடர்ந்தே குடியாத்தம் குமரன் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அடுத்த செய்தி