ஆப்நகரம்

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறுகள்: பூச்சி முருகன் கொடுத்த வாக்குறுதி!

வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் பூச்சி. எஸ். முருகன்.

Samayam Tamil 25 Jan 2022, 6:52 am
அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி வாரியத்தில் நடந்த தவறுகளை சரி செய்யும் பணிகளை அமைச்சர் உடன் சேர்ந்து செய்வேன் என்று கூறியுள்ளார் பூச்சி எஸ் முருகன்.
Samayam Tamil poochi s murugan


திமுக ஆட்சியமைத்த உடனே வாரியத் தலைவர் பதவிகள் நிரப்பப்படும் என அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் எதிர்பார்த்து வந்தனர். கொரோனா இரண்டாவது அலை போராட்டம், நிதிப் பற்றாக்குறை என வாரிய நியமனங்கள் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வந்தன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். லட்சக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட தமிழக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவராக திமுகவின் தோழமை அமைப்புத் தலைவர் பொன்.குமார் நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் தற்போது வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி.எஸ்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வன்னியர் சமூகத்துக்கு துணை முதல்வர் பதவி: பூங்குன்றன் பலே ஐடியா!
சென்னை கோயம்பேட்டில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

திமுக தலைமை நிலையச் செயலராக பதவி வகித்து வரும் பூச்சி. எஸ். முருகனை வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலகத்தில் பூச்சி எஸ் . முருகன் வீட்டு வசதி வாரிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பூச்சி எஸ் முருகன், “வணக்கம். வீட்டு வசதி வாரிய தலைவராக நியமித்ததற்கு முதல்வருக்கும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமிக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: குரல் கொடுக்கும் சரத்குமார்
கடந்த ஆறு மாதங்களாக கடந்த ஆட்சியில் நடந்த தவறுகளை சரி செய்யும் பணியை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகி்ன்றனர். அவர்களுடன் துணை நின்று என் பணிகளை மேற்கொள்ளுவேன்” என்று கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, “சென்னையில் 193 இடங்களில் இருக்க கூடிய வாடகை குடியிருப்புகளில் 60 இடங்களில் வீடுகள் மோசமான நிலையில் உள்ளன. அவை அனைத்தையும் சரி செய்யும் பணி உடனடியாக மேற்கொள்ளப்படும். சென்னை பட்டிணம்பாக்கத்தில் புதிதாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சார்பில் மிக சிறப்பான கட்டிடம் கட்டப்பட உள்ளது” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி